Thursday, March 21, 2019

கிளைமாற்றி கிளைமாற்றி
காத்திருந்த கனவுகளின் இறக்கைகளை
சுலபமாய்ப்பிய்த்தெரியும் அவனில்
குரூரமுமில்லை காதலுமில்லையெனும்
கைமாற்றும் கசாப்புக்கணக்கில்
எதைக்கொண்டு எதையளப்பது

கூடாமொழியில்
வக்கரித்த சொற்களின்
பதவுறையைக் கொலைப்பதை
எவர் செய்வது

இல்லாததற்கெல்லாம்
இருப்பின்சாயலைத் தோய்த்து
நீர்க்காதவண்ணம்
எவ்விதங் காப்பது

இன்னும் இன்னும்
கேள்வித்த பொழுதுகளெல்லாம்
நுரைக்குமிழியின் நிறையில்
தன்னிலை வட்டத்தில்

-புவனம்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...