Tuesday, March 26, 2019

#கொழுக்குமலைப்பயணத்தில் DEC2017

#கொழுக்குமலைப்பயணத்தில்
சனியன்று முன்மாழைப்பொழுதில்
மற்றவர்கள் ஓய்வில் இருக்க சும்மா அருகே இருக்கும் ஏலக்காட்டிற்குள் நடந்துவிட்டு வரலாமென  நாங்க ஒரு ஆறுபேர் கிளம்பினோமா..  மனித நடமாட்ட இருக்கிற தூரம் வரைக்கும் திட்டமிட்டு தான்.  ஆனால்
இன்னும் கொஞ்சம் முன்னே சென்று தான் பார்ப்போமென  தீர்மானித்து அடங்காத ஆவலாதிகளாய் அடர்வுகாட்டுக்குள் போகப்போக ஓங்கார ஓசையுடன் நீர் கொட்டுகிற சத்தம் வேறு ஈர்த்ததா. அருகே போய் பார்த்துவிடும் ஆர்வத்தில் ஒரு மலைமுகட்டில் இருந்து இறங்கி அடுத்ததில் ஏறி அதிலிருந்தும் இறங்கி என ஒரு சாகச முயற்சிக்கு  பிற்பாடு கண்ட நீரோட்டம்.   ப்ப்ப்ப்ப்ப்ப்பா  செம ஜில்.. முதலில் அச்சமூட்டிய குளிர்நீர் மெல்ல மெல்ல ஈர்த்துக்கொள்ள மாற்றுடை இல்லாத யோசனையே இல்லாமல் தன்மயத்தின் அளவுதலில் நீரோடு  நேரம் போவதே தெரியாமல்,
திரும்பி வரவே மனமில்லாமல்,  ஆனால் இருளத்தொடங்குமுன் போயாகவேண்டுமேன்னு  கிளம்பினால்..  திக்கு தெரியாமல் ஒரு பத்து இருபது நிமிடங்கள்  கொஞ்சம் திணறி, திகைத்து, தொலைந்து இதெல்லாமும் ஜோரான அனுபவங்கள் தாம். ஒருவழியாக போனபாதையை நூல் பிடித்து ஏறி  இருப்பிடத்தை சேர்ந்தோம் பொழுதோடு. 😎😎
Photo

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...