இன்றையகாலை நடையை ஏழு மணிக்கு தொடங்கினேன்.
துளிர் வெயிலும் பனிபோர்த்தலுமாய் இந்த மலைப்பாதையில் நடக்க நன்றாகவே இருக்கிறது. ஒரு சில ஆட்டோக்களையும் நடந்துவருகிற கிராம மக்களையும் தவிர விடியல் நேரத்தில் வேறு வாகனங்களைக் காணோம்.
அருகே மஞ்சக்கொள்ளி அத்தனாவூரென இரு கிராமங்களின் வழி, தங்கியிருக்கும் ரிஸார்ட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் இன்றைய நடை முடித்து வந்தேன். கூட கொஞ்சம் நடந்திருக்கலாம் ஆனால் பத்ரம் தூரம் போய்விடாதே. டூரிஸ்ட் மலைபகுதிகளில் பாதுகாப்பு இருக்காது உள்ளேயே நடந்துவிட்டு வந்துவிடச்சொல்லி கன்ச்சு தைரியமூட்டி அனுப்பியதால் அத்தோடு திரும்பவேண்டியதாகிவிட்டது.
இங்குள்ள கிராமங்கள் விவசாய நிலத்தினூடே முப்பது நாட்பது வீடுகளோடு இருக்கின்றன. பீன்ஸ் கத்திரி வெண்டை தக்காளி பெரும்பாலும் காய்கறிகள் தான். கொஞ்சமாய் நெல்லும் உண்டு. இங்கே வசிப்பவர்கள் பூர்வீகமாய் அப்பன் பாட்டன் காலத்திலிருந்து இங்கேயே பிறந்து வளர்ந்த மலைவாழ் பழங்குடியினர். குறைந்தது வீட்டிற்கு இரு டாகீஸ் கட்டாயமாய் வளர்க்கிறார்கள் போல. வீடுகள் நிறைந்த ஊள்ளூடிப்பாதைகள் வழியே போக டாகீஸ்ஸை நினைத்து பயந்து வந்ததால் சாலையோரமே நடந்தேன்.
அருகருகே உள்ள வீடுகளின் வாசல்களில் மாட்டிற்கு வைக்கோல் வைத்துக்கொண்டும் பாத்திரங்கள் கழுவியபடியும் இருந்த பெண்களை பார்க்கமுடிந்தது.
எதிரே சால்வையை போர்த்திக்கொண்டு வந்த வயதான பெண்மணியிடம் பேசிப்பார்க்கலாமேன்னு தோன்றியதால்..
உங்களுக்கு தமிழ் தெரியுமான்னு தொடங்கினேனா.
இல்ல தமிழ் தெரியாதென தமிழிலேயே பதில் சொன்னார்.
" அப்போ நீங்க என்ன பேசுவீங்க. என்ன மொழியிலென கேட்டால்
சும்மா வா போ அப்படி இப்படின்னு தான் பேசிப்போம். இதோ இப்ப பேசறா மாதிரி தான் பேசிப்போம். தமிழெல்லாம் எங்களுக்கு எங்கே தெரியப்போகுதென்றார் தமிழில் பேசிக்கொண்டே. பேசிக்கொண்டிருக்கும்
மொழிக்கு பெயர்தான் தமிழென நிஜத்திலயே அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சர்யம். பெயர் சாந்தாமணியாம். பாதையிலிருக்கும் திட்டில் அமர்ந்து கூட இரண்டு மூனு நிமிசம் பேசிக்கொண்டிருந்தேன். "வூட்லர்ந்து கொள்ளிக்கு போறேன்" வட ஆர்காடு மாவட்டகாரர்களின் வட்டார தொனிப்பு.
எட்டு பிள்ளைகளாம். கொள்ளிக்கு போய் அங்கிருந்து நெல்லை எடுத்துப்போய் குத்தக்கொடுக்கவேண்டுமென்றார். மங்களம் கிராமத்திலிருக்கிறதாம் வீடு. அங்கே எத்தனை வீடுகளென்றால் ஒரு பத்திருக்குமென்றார். படம் எடுத்துக்கவா உங்களை என்றால் கொஞ்சம் சங்கோஜித்து சரி என்றார். ரொம்பவும் நசநசவென கேள்விகளாக கேட்டு கஷ்டபடுத்த வேண்டாமென தோன்றியதால் அத்தோடு நகர்ந்தாச்சு. அப்படியே கேட்டுவைத்தாலும் அதற்கெல்லாம் சாந்தாமணி அம்மைக்கு பதில் தெரியுமான்னும் தெரியல.
மேலும் நடையில் .. அரசு கிராம அலுவலகக் கட்டிடம் அருகேயே அரசு நூலகம், மிக அழகான சுத்தமான பராமரிப்புடனான கட்டிடங்களில் அரசுப் பள்ளியும் , மலைவாழ் மாணவர்கள் தங்கிப்படிக்கிற உணவு உறைவிடப் பள்ளியும் ஹாஸ்டலும் அதில் நண்டும் சிண்டுமாய் பிள்ளைகளையும் பார்த்தேன். பள்ளி திறந்தே இருக்கிறது உள்ளே ஆட்களைக்காணோம். ஷாஸ்டல் கேட் உள்பக்கமாய் பூட்டியிருக்கிறது. உள்ளே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த நண்டுசிண்டுகளோடு கதைத்த போது இதோ ஒம்பது மணிக்கு ஸ்கூல் திறக்கும். இப்ப சாப்ட்டு கிளம்புவோம் பரிட்சை பதினாலாம்தேதியில் முடியும் அப்புறம் ஊருக்கு போய்டுவோமென சொன்னது ஐந்து, ஏழு படிக்கிற குட்டிகள். குக்கு என்கிற குட்டிபெண் இரண்டாம் வகுப்பாம். கூந்தலை பின்னிக்கொண்டே ஒரு பையனின் பின்னே ஒளிந்துகொண்டு வெட்கத்தோடு பெயரைச் சொன்னது.
திரும்பி வரும்போது மஞ்சக்கொள்ளையில் பார்த்த மற்றுமொரு பெண் சொன்னது வீட்டுக்காரரோட வேலையினால் ( ஆட்டோ மெக்கானிக்) இந்த ஊருக்கு வந்து ஆறு வருடங்களாகிறதாம். வாடகை குறைவு காய்கள் விலையெல்லாம் குறைவு. பிள்ளைகள் படிப்பது ஓரளவு இங்கே பெயர்வாங்கிய தனியார் பள்ளி ( சார்லஸ்) வேன் வந்து கூட்டிட்டு போகுமாம். இந்த ஊர் செட் ஆயிடுச்சா கேள்விக்கு இல்லை பிடிக்கலையாம். இந்த ஊர் மக்கள் ஒட்டி பழகுகிறவர்கள் இல்லையாம். பழக்க வழக்கங்களும் பிடித்தமானதாக இல்லை. என்னமாதிரி பழக்கவழக்கமென்றால் புருசன் பொண்டாட்டின்னு கணக்கில்லாமல் யாரும் யாரோடும் சகஜமாய் வாழ்வார்கள் - என்றது உண்மைதானா தெரியவில்லை. இங்குள்ள மலைக்குடி மக்கள் எந்த இனம்/ வகையைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அந்த பெண்ணுக்கு பதில் தெரிந்திருக்கவில்லை.
இந்த ஏலகிரியில் சுற்றுலா தலம் என்கிற ரீதியில் பெரிதாய் ஏதுமில்லை.ஆனால்
நிறைய பின்தங்கிய, உள்ளடங்கிய கிராமங்கள் இருக்கும்போல. இங்குள்ள நடப்புகளை நிதானமாய் சுற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆர்வமாய்த்தான் இருக்கு. வாய்ப்பு கிடைக்கட்டும்.
#ஏலகிரி
துளிர் வெயிலும் பனிபோர்த்தலுமாய் இந்த மலைப்பாதையில் நடக்க நன்றாகவே இருக்கிறது. ஒரு சில ஆட்டோக்களையும் நடந்துவருகிற கிராம மக்களையும் தவிர விடியல் நேரத்தில் வேறு வாகனங்களைக் காணோம்.
அருகே மஞ்சக்கொள்ளி அத்தனாவூரென இரு கிராமங்களின் வழி, தங்கியிருக்கும் ரிஸார்ட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் இன்றைய நடை முடித்து வந்தேன். கூட கொஞ்சம் நடந்திருக்கலாம் ஆனால் பத்ரம் தூரம் போய்விடாதே. டூரிஸ்ட் மலைபகுதிகளில் பாதுகாப்பு இருக்காது உள்ளேயே நடந்துவிட்டு வந்துவிடச்சொல்லி கன்ச்சு தைரியமூட்டி அனுப்பியதால் அத்தோடு திரும்பவேண்டியதாகிவிட்டது.
இங்குள்ள கிராமங்கள் விவசாய நிலத்தினூடே முப்பது நாட்பது வீடுகளோடு இருக்கின்றன. பீன்ஸ் கத்திரி வெண்டை தக்காளி பெரும்பாலும் காய்கறிகள் தான். கொஞ்சமாய் நெல்லும் உண்டு. இங்கே வசிப்பவர்கள் பூர்வீகமாய் அப்பன் பாட்டன் காலத்திலிருந்து இங்கேயே பிறந்து வளர்ந்த மலைவாழ் பழங்குடியினர். குறைந்தது வீட்டிற்கு இரு டாகீஸ் கட்டாயமாய் வளர்க்கிறார்கள் போல. வீடுகள் நிறைந்த ஊள்ளூடிப்பாதைகள் வழியே போக டாகீஸ்ஸை நினைத்து பயந்து வந்ததால் சாலையோரமே நடந்தேன்.
அருகருகே உள்ள வீடுகளின் வாசல்களில் மாட்டிற்கு வைக்கோல் வைத்துக்கொண்டும் பாத்திரங்கள் கழுவியபடியும் இருந்த பெண்களை பார்க்கமுடிந்தது.
எதிரே சால்வையை போர்த்திக்கொண்டு வந்த வயதான பெண்மணியிடம் பேசிப்பார்க்கலாமேன்னு தோன்றியதால்..
உங்களுக்கு தமிழ் தெரியுமான்னு தொடங்கினேனா.
இல்ல தமிழ் தெரியாதென தமிழிலேயே பதில் சொன்னார்.
" அப்போ நீங்க என்ன பேசுவீங்க. என்ன மொழியிலென கேட்டால்
சும்மா வா போ அப்படி இப்படின்னு தான் பேசிப்போம். இதோ இப்ப பேசறா மாதிரி தான் பேசிப்போம். தமிழெல்லாம் எங்களுக்கு எங்கே தெரியப்போகுதென்றார் தமிழில் பேசிக்கொண்டே. பேசிக்கொண்டிருக்கும்
மொழிக்கு பெயர்தான் தமிழென நிஜத்திலயே அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சர்யம். பெயர் சாந்தாமணியாம். பாதையிலிருக்கும் திட்டில் அமர்ந்து கூட இரண்டு மூனு நிமிசம் பேசிக்கொண்டிருந்தேன். "வூட்லர்ந்து கொள்ளிக்கு போறேன்" வட ஆர்காடு மாவட்டகாரர்களின் வட்டார தொனிப்பு.
எட்டு பிள்ளைகளாம். கொள்ளிக்கு போய் அங்கிருந்து நெல்லை எடுத்துப்போய் குத்தக்கொடுக்கவேண்டுமென்றார். மங்களம் கிராமத்திலிருக்கிறதாம் வீடு. அங்கே எத்தனை வீடுகளென்றால் ஒரு பத்திருக்குமென்றார். படம் எடுத்துக்கவா உங்களை என்றால் கொஞ்சம் சங்கோஜித்து சரி என்றார். ரொம்பவும் நசநசவென கேள்விகளாக கேட்டு கஷ்டபடுத்த வேண்டாமென தோன்றியதால் அத்தோடு நகர்ந்தாச்சு. அப்படியே கேட்டுவைத்தாலும் அதற்கெல்லாம் சாந்தாமணி அம்மைக்கு பதில் தெரியுமான்னும் தெரியல.
மேலும் நடையில் .. அரசு கிராம அலுவலகக் கட்டிடம் அருகேயே அரசு நூலகம், மிக அழகான சுத்தமான பராமரிப்புடனான கட்டிடங்களில் அரசுப் பள்ளியும் , மலைவாழ் மாணவர்கள் தங்கிப்படிக்கிற உணவு உறைவிடப் பள்ளியும் ஹாஸ்டலும் அதில் நண்டும் சிண்டுமாய் பிள்ளைகளையும் பார்த்தேன். பள்ளி திறந்தே இருக்கிறது உள்ளே ஆட்களைக்காணோம். ஷாஸ்டல் கேட் உள்பக்கமாய் பூட்டியிருக்கிறது. உள்ளே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த நண்டுசிண்டுகளோடு கதைத்த போது இதோ ஒம்பது மணிக்கு ஸ்கூல் திறக்கும். இப்ப சாப்ட்டு கிளம்புவோம் பரிட்சை பதினாலாம்தேதியில் முடியும் அப்புறம் ஊருக்கு போய்டுவோமென சொன்னது ஐந்து, ஏழு படிக்கிற குட்டிகள். குக்கு என்கிற குட்டிபெண் இரண்டாம் வகுப்பாம். கூந்தலை பின்னிக்கொண்டே ஒரு பையனின் பின்னே ஒளிந்துகொண்டு வெட்கத்தோடு பெயரைச் சொன்னது.
திரும்பி வரும்போது மஞ்சக்கொள்ளையில் பார்த்த மற்றுமொரு பெண் சொன்னது வீட்டுக்காரரோட வேலையினால் ( ஆட்டோ மெக்கானிக்) இந்த ஊருக்கு வந்து ஆறு வருடங்களாகிறதாம். வாடகை குறைவு காய்கள் விலையெல்லாம் குறைவு. பிள்ளைகள் படிப்பது ஓரளவு இங்கே பெயர்வாங்கிய தனியார் பள்ளி ( சார்லஸ்) வேன் வந்து கூட்டிட்டு போகுமாம். இந்த ஊர் செட் ஆயிடுச்சா கேள்விக்கு இல்லை பிடிக்கலையாம். இந்த ஊர் மக்கள் ஒட்டி பழகுகிறவர்கள் இல்லையாம். பழக்க வழக்கங்களும் பிடித்தமானதாக இல்லை. என்னமாதிரி பழக்கவழக்கமென்றால் புருசன் பொண்டாட்டின்னு கணக்கில்லாமல் யாரும் யாரோடும் சகஜமாய் வாழ்வார்கள் - என்றது உண்மைதானா தெரியவில்லை. இங்குள்ள மலைக்குடி மக்கள் எந்த இனம்/ வகையைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அந்த பெண்ணுக்கு பதில் தெரிந்திருக்கவில்லை.
இந்த ஏலகிரியில் சுற்றுலா தலம் என்கிற ரீதியில் பெரிதாய் ஏதுமில்லை.ஆனால்
நிறைய பின்தங்கிய, உள்ளடங்கிய கிராமங்கள் இருக்கும்போல. இங்குள்ள நடப்புகளை நிதானமாய் சுற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆர்வமாய்த்தான் இருக்கு. வாய்ப்பு கிடைக்கட்டும்.
#ஏலகிரி
No comments:
Post a Comment