Monday, November 4, 2013

எஞ்சியதன் நாளை


மொத்தத்தின் உள்ளடக்கமாய்
பின் எப்பொழுதோ புரட்டிப் பார்க்கவென 
வரிகளின் இடுக்கில் 
பாடம் செய்த புன்னகை

கம்பிவேலியில் 
கால்பின்னிய 
ஆட்டுக்குட்டியின் சுதந்திரம்
அப்புன்னகையின் வீரியத்திலும் 

உண்டு உறைந்த 
உமிழ் நீரின்
நூலாம்படைச் சொற்களில்  

சிலந்தியின் நகர்வு 

வெனிஸ் நகர வீதிகளை 
கற்பனித்ததின் தார்சாலையில் 
பெய்த மழையாகிறது 
முட்கள் நகராக் கடிகையை
கவிதையாக்குவது 

-புவனம்

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...