Tuesday, April 1, 2014

சாரல் கவிதைகள்



அனுமதிக்கு காத்திராமல் 
அவிழும் சொல்லின் 
மகரந்த விகசியை எழுத 
பின்னிப் பிரிந்த 
ஞாபகத்தை
மல்லிமொட்டூறும் வாசச்செய்தியை
காற்று முடங்கும் பொழுத்துக்குள்
லாவகமாய்
கிடுகுகள் முடையும்
கற்பனைக்குள்
சந்தமேற்றி
இவளானதன் இசைச்சீர்


****                        ****

பகடையின்
ஏறுமுகங்களை
இறங்குவிகிதத்தில்
எத்தனையாவது
முறையாகவோ எண்ணிக்கொண்டிருந்தவனின்
கைக்கிளை
பிறிதொரு நாளில்
பூக்காடானது


****                             ****

தொட்ட விரல்களிலெல்லாம்
 பட்டாம்பூச்சியை
 ஒட்டிக்கொண்டவளின் 
சிரிப்பணைய
விரிகிறது நிறங்கள்...


-புவனம்  

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...