Friday, July 12, 2013

ஒளி பிரிகையின் ஒலி

 
மெல்லியல்
நரம்புப் பின்னலில்
குருதியும் சதையுமாய்
இசையூட்டம்

தொடர்பு எல்லைக்கு வெளியேயும்
அலைப்பேசும்
சிகைக்கோதல்
ஞாபகக் கோர்ப்பின்

கடவுச்சொல்லடுக்கில்
காற்றுப்புகாத
கையடக்க
கனவில் மடித்து
காத்திருப்பு

உப்பு நீர் முகந்த மேகங்கள்
நம் பாதையை உரசும் வரை

புழுதி துறந்த 
புதுமணலில்
வானவில்
வனையட்டுமென

ஒளி பிரிகையின் ஒலி

-புவனம்
 

Wednesday, July 10, 2013

இணைமுரண்



இலையுதிர் காலத்து
இணக்கமற்ற விதிர்த்த  மொழியில்
திருப்பப் பாதை எங்கும்
இருள் கவ்விய
வெறுமை சூழ
 
அவளும் தனிமையும்

எவ்விடமோ
இறுக்கிப் பிணைந்த
முரண் முடிச்சுகளின் கயிறு
வேரூடி
துருத்திய உருவோடு
துரத்துவதாய்

கால்கள் பின்னிப் புதைய
அசாதாரண தருணத்தில்
அமிழ்ந்து போனபின்
நினைவு தப்புதலே
விதையென

-புவனம்
 

Sunday, July 7, 2013

ஜோக்வா (விழிப்பு ).. மராத்தி மொழி திரைப்படம்


முன்பு  நம் பகுதியிலும்  வழக்கில்  இருந்த  தேவதாசி முறையே  கிட்டத்தட்ட .. ஆனால் ஆண்களையும் சேலை கட்டி இது மாதிரி இறைவிக்கு அர்ப்பணிப்பு செய்ததாக கேள்விப் பட்ட வரை  இல்லை

கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர கிராமப் புறங்களில் அதீத நம்பிக்கையோடு பின்பற்றப்படும்  எல்லம்மா என்ற பெண் தெய்வத்துக்கு நேர்ந்து விடப்படும் பெண்கள்  (ஜோடின்) மற்றும் ஆண்கள்  (ஜோக்தா)   மஞ்சள் தரித்து எல்லம்மாவுக்கு என நேர்ந்து விட்ட ப்பிறகு அந்த ஆணோ, பெண்ணோ  பிச்சை எடுத்து  வாழ்வதை, அவ்வூரில் இருக்கும் ஆண்களுக்கு பொதுச் சொத்தாக மதிக்கப்படுவதை  மிகுந்த வலியோடுக் கூடிய  காட்சிகளில் சொல்லப்பட்ட படமே ஜோக்வா (விழிப்பு ).. மராத்தி மொழி திரைப்படம்

றுக்கிப் பிடித்து அட்டையாய்  உறிஞ்சும் சமூக மூடப் பழக்கமும் அதில் கருகிச் சாம்பலாகும் தனி மனித உணர்வுகளையும் நகரும் காட்சிகளில் நேர்த்தியாகப்  படம் பிடித்துக்  காட்டப்படுகிறது.

சுலி என்ற இளம்பெண் பட்டாம்பூச்சியாய் கிராமத்தில் சுற்றித்  திரிந்து தனக்கு உரிய அழகான எதிர்காலத்தின் கனவில் நனைபவள் .. தலைமுடியில் சற்றே சிக்குப்பிடித்ததே  அறிகுறி என எல்லம்மாவுக்கு நேர்ந்துவிடப்  படுகிறாள் .. மிகுந்த அதிர்ச்சியோடு .. தனக்கு நேர்வதை எதிர்க்கொள்ள முடியாமல் .. சுற்றி இருப்பவர்களை எதிர்க்கவும்  இயலாமல்..

தாயப்பா என்கிற ஆண் மகனுக்கும் இதுவே நேர்கிறது... ஆடைகள் பறிக்கப்பட்டு சேலையில் வலம்வர ச்செய்கிற அவன் சமூகத்தை, வீட்டை, உறவினர்களை ச்  சினத்தோடு  எதிர்க்கிறான் அவன் ..

இவ்விருவருக்கும் இடையே மலரும் காதலும் .. சுற்றிப் பிணைந்த கட்டுடுடைத்து  தங்கள் சுயம் காணும் ஒரு அழகான சித்திரமாகவும்  ஜோக்வா சிறந்த வெளிப்பாடு.

ஆண் என்பதையும் பெண் என்பதையும் கடந்த மனிதப்பிறவிகள் நாம் .. உலகின் நிர்வாணக் கண்களுக்கு ஆடை அணிந்த மனிதன் நீ மட்டுமே என்கிற வசனங்கள் உயிர்ப்பு
தவிர பின்னணி இசையும் .. பாடல்களும் செவிக்கு இசைவு 
மீன்கொத்தியின் அலகில் தொக்கி நின்றப்போதும் தன்னைப்பாதுகாப்பாய் மீன் உணர்ந்தால் அதுவே காதலுற்றத் தருணம்என்பதாக தோன்றியது 
புவனம்

Wednesday, July 3, 2013

அந்நாளில்



கூடுடை சாமரம் தொகைந்து
திரிந்தலைந்த அந்நாளில்
அப்பறவைக்கு

அகத் திறவும் கோள்
பச்சை மருதாணி இட்டதும்
சிவப்பாய் முகிழ்ந்தது

விடியலுக்குப் பின்னும்
நிலவில்
கால் மடக்கி
குளிர்ந்துறங்கும்
கனவுகளுக்கு
தின்னக்கொடுத்தது
தன் சிறகுகளை

கூண்டடைப்பில்
சிரம் முட்டியபோதினும்

-புவனம்

 

Monday, July 1, 2013

எங்கே தொடங்கினாலும்



களிமண் குழைத்திழைத்த
கையளவு உலகம்
மிட்டாய் களிப்பு
மிதக்கும் காதல்
மோகக் குறிப்பெய்தும்
 கூழாங்கல் இணை
 உரசலிசை ஸ்பரிசம்
அடைநிலத்தில் காந்தபுயல்
அதிர்வு இடுங்கால்
மெல்லோசை
அவளெனில்

காலுக்குக்  கீழே
இடறி எக்காளமிடும்
தேய் காலமும்
தவறவிட்ட இரயிலுமாய்

தேவைக்கு மேல் சொல்புகாமல்
தினவுக்கு மிஞ்சி தீண்டல் மிகாமல்
மறுத்தளித்த தேடல் நிமித்தம்
உப்பு மறந்த பண்டத்தோடு
ஊறுகாய் பதத்தில்
தொட்டிடுங்கை
 நிரல் நிறைப்பவன்
அவனெனில்

அங்கே பிரிகிறது பாதை....

-புவனம்

 

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...