Tuesday, March 26, 2019

KARNATAKA TRIP - AUG 2017

நண்பிகள் நாங்கள் மூவர். மூவரில் ஒருவருடைய கார். முழுக்க டீசல் நிரப்பிக்கொண்டு, நாள் வாடகை கணக்கில் ஒரு ஓட்டுநரை அமர்த்திக்கொண்டு மனம்போன போக்கில் குழைத்து கொண்டாட ரோட் ட்ரிப் கிளம்பினோம்.திடுமென தான்.  விடுமுறை நாட்களில் பகுதி நேர ஓட்டுனராகவும் மற்றபடி எதோ ஒரு அலுவலகத்தில் கணக்கராகவும் பணியாற்றும்
கன்னட இளைஞன் எங்களுக்கு வாய்த்த ட்ரைவர். தேவைக்கு அதிகமாக  ஒற்றை வார்த்தையும் வைக்காத, அனாவசியமாக பார்வையைக்கூட திருப்பாமல்,கருமமே கருத்தாக, நேர்த்தியாக வாகனத்தை செலுத்தியவனுக்கு. 👏👏.

முன்கூட்டியே பெரிதாக திட்டமிடப்படாத சட்டென தொடங்கிய #பயணம் என்பதால் சரியான, பிடித்தமாதிரியான தங்ககத்தை தேர்வுசெய்வது மட்டும் முடியாமல் ஆனது. அத்தனை ஹோம் ஸ்டேக்களும் புக் ஆகியிருந்தது. விடுமுறை கால நெருக்கடி.👎 இராத்தங்கலுக்கு  கிடைத்த இடத்தில் காசு கூடுதல் வசதி மகா மட்டம் என்ற போதிலும் சகித்து சமாளித்துவிட்டோம். மொத்த பயணத்திலும் அதுமட்டுமே குறை.

காபி விளைகிற நிலத்தில் நினைத்த இடத்தில் எல்லாம் கணக்கில்லாமல் எத்தனையோ தடவைகள் பருகியபோதும் குறைவில்லாத ருசியின் போதையை ஏற்றிக்கொண்டே இருந்தது சிக்மகளூர், சக்கேலேஸ்பூரில் பில்டர் காபி. 👌👌

சிக்மகளூர் வெறும் வார்த்தைகளில் விளக்கி சொல்லிவிடமுடியாத பிரமாதமான, தவறாமல் பார்த்துவிட வேண்டிய அற்புதமான மலைக்காடு.
இங்கே சுற்றுலா காணுமிடங்களான முல்லியங்கிரி, பாபா புதன்கிரி இவைகளையும் தாண்டி மேலே மேலே உயரத்திற்கு கண்களும் மனமும் குளிரக்குளிர பயணப்பட்டு
உயரமுகத்தில் நின்று  சுற்றிச் சூழ்ந்த அற்புதத்தில் கொஞ்ச நேரம் மெய்மறக்கக்கூடுமெனில் திரும்பிவரும் பொழுது உடலும் மனமும் பஞ்சுப்பொதியல் போல் லேசாகி அப்படியொரு அலாதியை தருகிறது. நிஜம். குறைந்த பட்சம் மூன்று நாட்கள் போதவே செய்யாது எனும்படியான சிக்மகளூர். அருமையான ட்ரெக்கிங் ஸ்பாட். நிறைய சைக்கிள், பைக் சவாரி ஆண்கள்,பெண்கள்,நண்பர்கள் கூட்டம் தான் அதிகம். குளிர்மையான குளிரோடு அப்படியொரு மலை பிரதேசம்.. வாழ்வின் அந்த  அற்புத கணங்களை கொண்டாட.. கூட மனதிற்கு பிடித்தமான துணையோடு பயணப்படுவதென்றால்  நாம் யாரை தேர்ந்தெடுப்போம்!! அது அவரவர் தேர்வென அங்கே ஒருவனை கண்டபோது தோன்றியது.    காரின் நான்கு பக்க சாளரங்களையும் முழுக்க திறந்துவிட்டபடி, அவ்வளவு சத்தமாய் இசையை வழியவிட்டபடி
அவன் தன் நாயோடு மலை உச்சிக்கு போய்க்கொண்டிருந்தான். ஆஹா💖

சொல்ல நிறைய நிறைய கதைகளையும் சுகமான பயண அனுபவங்களையும் திரட்டிக்கொண்டு, இனி அடுத்த மீட்டலுக்கான இடைவெளி விட்டு அவரவர் இடத்திற்கு, நடப்பிற்கு திரும்பிவிட்டோம். மீ, சுகிர்தா, வீனா 💞
Photo

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...