கலைக்கூத்தாடியின் கைக்குழையும்
வித்தை எந்தியவனின் சொற்கள்
ஏணியில் ஏற்றி
நெளிநாகத்தில் இறக்கியாடும்
சொக்கலாட்டம்
மையம் கொண்டாடும் காற்றோடு கூடி
மையலில் வீழ்ந்தாடும் மழையின்
கடைசி சொட்டு ஈரம் தொட்டு
எழுத எத்தனித்தப் பெயரின்
காந்த ஊக்கியாய்
அத்தேர்ந்த இசைஞன்
இழுத்த இழுப்புக்கெல்லாம்
இயைந்து திறவும் மீட்டலோசையில்
ஆனந்த பைரவி
-புவனா கணேஷன்
No comments:
Post a Comment