Friday, May 31, 2013

இசைந்ததுவும்



கலைக்கூத்தாடியின் கைக்குழையும்
வித்தை எந்தியவனின் சொற்கள்
ஏணியில் ஏற்றி
நெளிநாகத்தில் இறக்கியாடும்
சொக்கலாட்டம்

மையம் கொண்டாடும் காற்றோடு கூடி
மையலில் வீழ்ந்தாடும் மழையின்
கடைசி சொட்டு ஈரம் தொட்டு
எழுத எத்தனித்தப்  பெயரின்
காந்த ஊக்கியாய்
அத்தேர்ந்த இசைஞன்
இழுத்த இழுப்புக்கெல்லாம்
இயைந்து திறவும் மீட்டலோசையில்
ஆனந்த பைரவி

-புவனா கணேஷன் 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...