Saturday, June 1, 2013

பௌர்ணமியின் நிழல்



நிசப்தத்தின் எதிரொலிப்பை
காப்பிட்டுக்  கட்டி  இருத்திக்கொள்ள  நிழல்
நேர்ந்துவிட்ட நோன்பு
ஓங்காரமாய் ..

வெற்றிடத்தை வெறிக்க
திராணியற்று
இலக்கிலியாய்
எங்கோ திரியும்
கப்பல் பறவை ..

கனமேறிப் போன
சுவாசத்தை
கழற்றக்  கைகூடாது
காற்றின் மிடறில்
கற்பூரம் !!

-புவனா கணேஷன்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...