முதுகுக்கூனில் கல்லெறிந்து
குருதிக் குமிழ்
உடைத்து உவந்தவனின்
மனையாள்
கை நிறைய கர்ப்பை அள்ளி
நெருப்பில் குழைத்தாள் ..
பணையச் சூதில்
மதி தொலைத்தவனின்
பத்தினி
மீந்திருந்த மானத்தை
சமைத்து
காக்கைக்குச் சோறு படைத்தாள்..
குதவையில் குடும்பத்தை வைத்து
குடி மிதவையில் மிதந்தவனின்
துணையாள்
குடைசாய்ந்த அவரைக் கொடியை
தாலிக்கொடியில் நிமிர்த்தினாள்..
புறமுதுகிட்டது விதி!
- புவனா கணேஷன்
No comments:
Post a Comment