Wednesday, May 29, 2013

விதி

 

முதுகுக்கூனில் கல்லெறிந்து
 குருதிக் குமிழ்
உடைத்து உவந்தவனின்
மனையாள்
கை நிறைய கர்ப்பை அள்ளி
நெருப்பில் குழைத்தாள் ..

பணையச் சூதில்
மதி தொலைத்தவனின்
பத்தினி
மீந்திருந்த  மானத்தை
சமைத்து
காக்கைக்குச்  சோறு படைத்தாள்..

குதவையில் குடும்பத்தை வைத்து
குடி  மிதவையில் மிதந்தவனின்
துணையாள்
குடைசாய்ந்த அவரைக் கொடியை
தாலிக்கொடியில் நிமிர்த்தினாள்..

புறமுதுகிட்டது விதி!

- புவனா கணேஷன் 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...