Tuesday, May 7, 2013

நினைவின் கூடு

 
 
அத்தோடு நில்லாமல்
பரண்மேல் கிடப்பெல்லாம்
தூசி தட்டி தும்மல்
கிளப்புவதோ

பழுத்த இல்லாளோடும்
பிசின் முறியா காதல்

ஒட்ட பிழிந்திடுனும்
ஓரம் காயா ஈரம்

மழை நனைத்த நிசியில்
நுணல் எழுப்பும் கூப்பாடு

தீரா பசி
உன் வரமா சாபமா !

குடைந்த வண்டும்
குழப்பத்தில் மாம்பழமும்

வேர் வாசமோ
விதை வாட்டமோ

மறதி இட்டுக்கொள்
மதில் மேல் பூனையே..

-புவனா கணேஷன்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...