Monday, May 27, 2013

வாடகை வீடு

 
கிழிக்காத நாள்காட்டியிலும்
நகர்கிறது தேதி

பற்றுப் பிரியாமல் பாத்திரத்தில் கனக்கிறது
பாலேடு

கழண்ட தாழ்ப்பாளுக்கும்
உடைந்த கதவுக்கும்
உரிமைப் போர்

வாயில் போட்டாலும்
வயிற்றை நிறைக்காத
வாய் - கா தகராறு

உடன் பிறந்தோனும்
ஒன்று விட்ட சோதரனும்
அண்டை நிலத்தோனும்
அன்னியனாக

நீதிமன்ற படிக்கட்டும்
கால் செருப்பும்
தேயத்தேய
வாய்தா
வக்கீலுக்கு வரும்படி

பங்காளியும் செத்துப்போனான்
பகுத்தாளியும் செத்தேப் போனான்..


-புவனா கணேஷன்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...