வானத்தின் வைபவம்..
கூடிக் குழுமிய மேகங்களுக்குப் போட்டியாக
வீதிக்குளியலை விரும்பாத பலரும்
குடைவாசிகளாய் உலாவியதொரு
மாலைத் தொட்டு
இதுகாறும்..
நீ நின்ற இடத்தின் நிழலையும்
பெயர்த்தே நகர்வது
களவாடலில் சேர்த்தியா!!
ஓர் இரவுச்சொல்லுக்கு
இறக்கை புணரமைத்து
உன் இருப்பிடம் நோக்கி
பறக்கச் செய்திருந்தேன்..
நீயோ!
பேரத்திற்கு மசிந்த துயிலோடு
இமை மூடிய லயிப்பில்..
உறக்கத்துள் ஊடிக் கலந்து
கனவில் சொன்னது
காலையில் காலாவதியாகும் என்றறிந்தே
இருப்பினும்
வாசல் விரிய நானிட்ட கோலத்தின் வடிவு கூடிப் போனது
என் மிகைச்சொல்லா!
உன் பதில்ச்சொல்லா!
-புவனா கணேஷன்
கூடிக் குழுமிய மேகங்களுக்குப் போட்டியாக
வீதிக்குளியலை விரும்பாத பலரும்
குடைவாசிகளாய் உலாவியதொரு
மாலைத் தொட்டு
இதுகாறும்..
நீ நின்ற இடத்தின் நிழலையும்
பெயர்த்தே நகர்வது
களவாடலில் சேர்த்தியா!!
ஓர் இரவுச்சொல்லுக்கு
இறக்கை புணரமைத்து
உன் இருப்பிடம் நோக்கி
பறக்கச் செய்திருந்தேன்..
நீயோ!
பேரத்திற்கு மசிந்த துயிலோடு
இமை மூடிய லயிப்பில்..
உறக்கத்துள் ஊடிக் கலந்து
கனவில் சொன்னது
காலையில் காலாவதியாகும் என்றறிந்தே
இருப்பினும்
வாசல் விரிய நானிட்ட கோலத்தின் வடிவு கூடிப் போனது
என் மிகைச்சொல்லா!
உன் பதில்ச்சொல்லா!
-புவனா கணேஷன்
No comments:
Post a Comment