Monday, May 27, 2013

உவகைச்சாரல்



புல்லோடு பயில் கொண்டு
ஊறிச்  சலனித்த பனித்துளியின்
முத்த ஈரம்

சிடுக்கிடும் காற்றோடு
சப்திக்கும் குழல் நகை 

உருவிலி காணாததொரு
உவத்தல் மொழி மோனம்

விழித்துயிர்த்த நுண்ணுணர்வை
தீண்டி திகைக்கச் செய்யும்
ஒற்றை விரல்

மண் வாசம் அள்ளி நுகரும்
மழை மோகம்

கவிதைக்கு வாழ்க்கைப்பட்டவள்
சூல் கொண்டதன்
சுவை முடிச்சு

- புவனா கணேஷன்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...