புல்லோடு பயில் கொண்டு
ஊறிச் சலனித்த பனித்துளியின்
முத்த ஈரம்
சிடுக்கிடும் காற்றோடு
சப்திக்கும் குழல் நகை
உருவிலி காணாததொரு
உவத்தல் மொழி மோனம்
விழித்துயிர்த்த நுண்ணுணர்வை
தீண்டி திகைக்கச் செய்யும்
ஒற்றை விரல்
மண் வாசம் அள்ளி நுகரும்
மழை மோகம்
கவிதைக்கு வாழ்க்கைப்பட்டவள்
சூல் கொண்டதன்
சுவை முடிச்சு
- புவனா கணேஷன்
No comments:
Post a Comment