குர்கானில் வசித்த வருடங்களில் கணவரோடு அல்லாமல் தனித்து நான் மட்டும் வெளியே எங்கே போவதாக இருந்தாலும் பயணிப்பது சைக்கிள் ரிக்சாவில் தான்..
அங்கே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் போக ஒன்று சொந்த வாகனம் இருக்க வேண்டும் அல்லது முக்கு, முனை தி...ரும்பல்களில் எல்லாம் ரிக்சா மட்டுமே.. குறைந்த அளவு கட்டணம் ஐந்து ரூபாய் இருந்தது.
பெரும்பாலும் பிஹாரி அல்லது பெங்காலி ஆட்கள் தான் அங்கே ரிக்சா ஓட்டியது..தனியே போவதால் சற்றே கவனமாய் வயது முதிர்ந்தவரின் வண்டியாக தேடி ஏறுவேன்.
நம்மை வைத்து ஒரு வயதானவர் வண்டி மிதிப்பதா என்றே நினைத்தாலும் வேறு வழி இல்லை.. பாதுகாப்பு குறைச்சல் அத்தோடு அது அவருக்கு வரும்படி...
கடைநிலை உழைப்பாளிகள் அங்கே எந்த மொழியை கொண்டவர் எனினும் ஹிந்தி நன்கு பேசுவர்.. தொடர்ந்து போவதால் என்முகம் சிலருக்கு பழகி விட்டு இருந்தது... ஏறியதில் இருந்து இறங்குமிடம் வரும் வரை அவர் அவர் சொந்த கதையை சொல்லுவார்கள்..
படிப்பு வாசனை அறவே இருக்காது, சிறு வயதில் திருமணம் முடிந்து இருக்கும்.. குறைந்தது 7 அல்லது 8 குழந்தைகள் இருக்கும்... வறுமையை போர்த்தி சொந்த ஊரில் பிழைக்க முடியாமல் குடும்பத்துடன் மொத்தமாக பஞ்சம் பிழைக்க இடம்பெயர்ந்தவர்கள் .
மானைவிமார்கள் எல்லாம் அங்கே மற்ற வீடுகளில் வீட்டு வேலை செய்ய, பிள்ளை கண்மணிகளை வருடத்திற்கு இவ்வளவு என ஒரு குறிப்பிட தொகைக்கு வீட்டுவேலைக்கு, வாடகைக்கு பெரிய பெரிய வீடுகளில் விட்டு விடுவார்கள்.. வருடம் ஒரு முறை தந்தையானவர் பிள்ளை கண்மணியை சந்தித்து குசலம் விசாரித்தும், விசாரிக்காமலும் முதலாளியிடம் இருந்து பிள்ளைக்கான வாடகை பணத்தை வசூலித்து வருவார்.
அங்கே திறந்தவெளி மைதானம் நிறைய.. பொதுவாக பெரிய பெரிய விழாக்கள், திருமணம் எல்லாம் மைதானத்தில் பந்தல் இட்டே நடத்தப்படும்.. அம்மாதிரி மைதானங்களின் மூலையில் தற்காலிக குடில் அமைத்து இம்மக்கள் உறைவிடம் செய்து கொள்வார்கள்..
அங்கே, எங்கள் வீட்டுக்கு மேல்வேலை செய்ய ஒரு அம்மா வருவார்... பெங்காலி பெண்மணி,நடுத்தர வயது.. வேலை சுத்தம், கை சுத்தம்.. கேட்டை திறந்து உள்ளே வரும் போதே சுருட்டு வாசனை தூக்கி அடிக்கும்..
அளவுக்கு அதிகமாக அவர் கை நடுங்குவதாக தோன்றும் சிலவேளை.. அம்மாஜி என் இப்படி கை நடுங்குதென கேட்டால்
" அது ஒன்னும் இல்லை , இன்னைக்கு இன்னும் சாராயம் குடிக்கவில்லை" அனாயசமாக சொல்வார்.
கடைநிலை உழைப்பாளர்களை நினைவு கூறும் நாள்
அங்கே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் போக ஒன்று சொந்த வாகனம் இருக்க வேண்டும் அல்லது முக்கு, முனை தி...ரும்பல்களில் எல்லாம் ரிக்சா மட்டுமே.. குறைந்த அளவு கட்டணம் ஐந்து ரூபாய் இருந்தது.
பெரும்பாலும் பிஹாரி அல்லது பெங்காலி ஆட்கள் தான் அங்கே ரிக்சா ஓட்டியது..தனியே போவதால் சற்றே கவனமாய் வயது முதிர்ந்தவரின் வண்டியாக தேடி ஏறுவேன்.
நம்மை வைத்து ஒரு வயதானவர் வண்டி மிதிப்பதா என்றே நினைத்தாலும் வேறு வழி இல்லை.. பாதுகாப்பு குறைச்சல் அத்தோடு அது அவருக்கு வரும்படி...
கடைநிலை உழைப்பாளிகள் அங்கே எந்த மொழியை கொண்டவர் எனினும் ஹிந்தி நன்கு பேசுவர்.. தொடர்ந்து போவதால் என்முகம் சிலருக்கு பழகி விட்டு இருந்தது... ஏறியதில் இருந்து இறங்குமிடம் வரும் வரை அவர் அவர் சொந்த கதையை சொல்லுவார்கள்..
படிப்பு வாசனை அறவே இருக்காது, சிறு வயதில் திருமணம் முடிந்து இருக்கும்.. குறைந்தது 7 அல்லது 8 குழந்தைகள் இருக்கும்... வறுமையை போர்த்தி சொந்த ஊரில் பிழைக்க முடியாமல் குடும்பத்துடன் மொத்தமாக பஞ்சம் பிழைக்க இடம்பெயர்ந்தவர்கள் .
மானைவிமார்கள் எல்லாம் அங்கே மற்ற வீடுகளில் வீட்டு வேலை செய்ய, பிள்ளை கண்மணிகளை வருடத்திற்கு இவ்வளவு என ஒரு குறிப்பிட தொகைக்கு வீட்டுவேலைக்கு, வாடகைக்கு பெரிய பெரிய வீடுகளில் விட்டு விடுவார்கள்.. வருடம் ஒரு முறை தந்தையானவர் பிள்ளை கண்மணியை சந்தித்து குசலம் விசாரித்தும், விசாரிக்காமலும் முதலாளியிடம் இருந்து பிள்ளைக்கான வாடகை பணத்தை வசூலித்து வருவார்.
அங்கே திறந்தவெளி மைதானம் நிறைய.. பொதுவாக பெரிய பெரிய விழாக்கள், திருமணம் எல்லாம் மைதானத்தில் பந்தல் இட்டே நடத்தப்படும்.. அம்மாதிரி மைதானங்களின் மூலையில் தற்காலிக குடில் அமைத்து இம்மக்கள் உறைவிடம் செய்து கொள்வார்கள்..
அங்கே, எங்கள் வீட்டுக்கு மேல்வேலை செய்ய ஒரு அம்மா வருவார்... பெங்காலி பெண்மணி,நடுத்தர வயது.. வேலை சுத்தம், கை சுத்தம்.. கேட்டை திறந்து உள்ளே வரும் போதே சுருட்டு வாசனை தூக்கி அடிக்கும்..
அளவுக்கு அதிகமாக அவர் கை நடுங்குவதாக தோன்றும் சிலவேளை.. அம்மாஜி என் இப்படி கை நடுங்குதென கேட்டால்
" அது ஒன்னும் இல்லை , இன்னைக்கு இன்னும் சாராயம் குடிக்கவில்லை" அனாயசமாக சொல்வார்.
கடைநிலை உழைப்பாளர்களை நினைவு கூறும் நாள்
- புவனா கணேஷன்
No comments:
Post a Comment