Tuesday, June 4, 2013

நித்திலப் பணிலம்



நெகிழ் விசும்பு ஊடிச்சொரிந்த
பிறை முத்தத்தில்
குழையும் மூங்கில் சுவர்

கதகதப்பு வேண்டி குளிர்மூட்டிச் சூரியனுக்கு
மலர் விடுத் தூது மடலின்
மகரந்த மினுக்கல்

மீட்டெடுத்தலில் சொட்டுச் சொட்டாய்
படர்ந்து தழுவிய வெய்யிலின்
நிழல் விழுந்த மோட்சம்

புலன் விகசிக்கும் தருணம் புரட்டி தோய்தலின்
மந்தகாசம்

உதிர்காலத்து இலைப்பேசி அந்தாதி நோக்கமாய் 
காதல் காசினி !

-- புவனம்  
 

 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...