போகிறப்போக்கில் எச்சமிட்டுப்
பறந்ததொரு பறவையின்
கீழ் கணக்கில்
துளிர்த்தவள்
அந்திமந்தாரையின் தாய்
இருள் பேழைக்கு
ஒளியேற்றலுகறக் குறிப்பெழுத
நியந்தவனின் கண்த்தடத்தில்
கிளர்ந்தவள் அவள்
தடதடக்கும்
நிமிடங்களை நெட்டித்தள்ளியபடி
நெடுந்தூரப் பயணத்துக்கான
பெட்டியடுக்களில்
விட்டுப்போனதன்
அடைப்புக்குறிச் சொல்லாய்
ஆகிப்போனான் அவன்
கிளை தன்
சிறகுகளோடு
தற்கொலைத்ததின்
வீச்சம் ஏகியது
பிரிவு நுகர்க் காற்று
புவனம்
No comments:
Post a Comment