Friday, June 28, 2013

-► அனாமிகாவின் தீவு ◄-



இருட்டுப்  போர்வைக்குள்
எரிதூபத்தின் இளவரசி நான்

உப்புகண்டம் ஆன பின்பும்
உக்ரத்தில் நீந்தும்
மீன்களில் ஒருத்தியாய்

கருக்கட்டலுக்கு நேர்ந்து விட்ட
விந்துக்கள்  வாங்கி

பிறப்போ இறப்போ 
பெயரிலி எம் முதுகுக்குப்  பின்னால்
வழியும் உலகின்
புறம் மறைக்கும் புலம்பி

ஈரம் பொதிய கனவுகள் மென்று
 தூக்கத்தில் உயிர்க்கும் பதுமைகளின்
உறைந்த புன்னகையும் , உதிரமும் வற்றிய
உரநிலம் வாங்கியவனின் கிடப்பில்
பத்தோடு பதினொன்றாம்
தூண்டா மணிவிளக்கு

விழி மின்னும்ஒளியல்
அதரம் சிந்தும் மிளிரல்
அழகுதிர்க்கும்  மேனி இயம்பல்
நுண்ணுனர் அக நெகிழ் தூறல்

நிதானித்து ருசிக்கும்
இரகசிய காதலன்
 கண்ணாடியில்

-►புவனம் 
 
** ஆப்பிரிக்க பெண் வாரிஸ் டேரியின் கதை, அரேபிய பெண் -பிரின்சஸ் சுல்தானாவின் கதைகளை வாசிக்க நேர்ந்ததன் தாக்கம் ..
இந்திய அதிலும் தென்னிந்திய பெண்ணாய் பிறந்தது யப்பா சாமி.. வரம்.
நிமிர்வு கொஞ்சமேயானாலும் முதுகெலும்பு ஜீவி என்ற வகையில் 
 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...