Friday, April 5, 2013

விதிர்ந்துழந்த

 
 
உள்ளே புதையல்
வெளியே தேவைகள்
இடையே
விசைகள் இறுகி
திறவுகோலுக்கு திமிறி
திறக்க மறுக்கும் தாழ்

ரசவாதம் மக்கிப்போன படிமக்கலம்
பிரதிபலிக்காத பிம்பங்களின் வரைவு

வேரும் மரமும்
ஒத்திசையாத கோணங்களின் செருக்கில்
ஒன்றிலிருந்து ஒன்று பெயர்ந்து விலக
சாய்ந்த கிளைகள்
சருகுகளின் உதிர்வோடு

விளங்கா பொருள் பூண்ட வினாவுக்கும்
விளக்கம் நுகரா விடைக்குமான
குறியெழுத்து

வரவேட்டில் வரிது கிட்டாது பதிவித்த
அனாமத்து கணக்கு அடைப்புக்குறிக்குள்
இடுங்கிப்போன சால்

இடக்கரையில் தாய் குறுக்குக்கோடாய்
வடக்கரையில் தந்தை நெடுங்கோடாய்
இடைவழி நீரில்
நீந்தவும் பழகா
மூழ்கவும் விரும்பா முரண் பயணத்தின்
வினைப்போக்கில்

விதிர்ந்துழந்த பிள்ளைகள் நாங்கள்
தலைக்கை தருதல் வேண்டி

-புவனா கணேஷன்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...