Wednesday, April 24, 2013

துபாயில் ஒரு மழை நாள்


சுழற்றி அடிக்கும் மண் புயலின் ..அதி தீவிர வேகத்தை நேற்று மாலையில், நேரில் பார்க்க வாய்த்தது ...

காற்றில் மிதந்து மண் வட்ட வடிவமிட்டு சுழன்றது பார்க்க அழகாய் ..ஒரு கைதேர்ந்த நடன பெண்ணின் அடவுகள் போல்...

எதை கண்டாலும் மொபைலில் படம் பிடிக்க...ும் வழக்கம் இருக்கிற எனக்கு இதை எடுக்க முடியவில்லை ... காட்சி தெளிவாய் விழுந்து ஒத்துழைக்கவில்லை...

முன் இரவு தொடங்கி ..பின் இரவு வரை காற்றின் வேகம் குறையவில்லை,மழை விடாமல் பெய்த்தது (பாலைவனத்தின் மழை - அதிசயமோ அதிசமாய் ) மழை பொழிவில் மண் மயங்கி மௌனித்தது.

காற்றும் மழையுமான கூடல் சங்கமத்தை ரசிக்க நேரம் இருக்கவில்லை.இன்று எங்களுக்கு வாரத்தின் முதல் நாள் தொடக்கம்.

இரண்டு நாள் விடுமுறை கொண்டாடத்தில் திளைத்த பிள்ளைகள் ..விடியா சோம்பலுடன் விடியும் முன் கிளம்பி ஸ்கூல் பஸ் பிடிக்க கிளப்பி தயார் செய்ய வேண்டும் என்பதால்...

இன்றும் ..இன்னமும் வெய்யில் வராத மெகா மேக மூட்டம், மீண்டும் மழையை உதிர்க்கலாம்...



No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...