Friday, April 5, 2013

நீ நீயாக




இருட்டுக்கு பழகிய கண்களுக்கு
உன் ஒளிபாய்ந்த உலகத்தின்
உள்நுலைந்ததில் தடுமாற்றம்

சிறகுகள் குறுக்கா தட்டான்கள்
தன்னிலைத்தன்மை

இயல்பில் வழுவியது எல்லாம்
பிறழ்வென இமிழல் ஒன்றுமொழிதல்

தங்கமும் தீக்குளிக்கும்
நகைத்து மின்னும் முன்

கானல் நீரோ காட்சி பிழையோ
ரசனையில் உயிர்த்தது

கருவறையில் சூழ்ந்த கருப்பு
கடவுளை மருட்டியதில்லை

எதுவென்று அழைக்கப்பட்ட போதினும்
நீ நீயாக...


-புவனா கணேஷன்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...