Wednesday, April 24, 2013

வரமே எனில்



பிணியுற்ற பொழுதும் நன்றே
உயிர் துடிப்போசை நுகர..

உவந்து நோக்கலில் அழாகாய்
பனிமூடிய மலைச்சரிவில் தவறவிட்டதொரு குடை

ஒற்றை கோபுர உச்சியில் எவருக்கு என்றில்லாமல் சுடரும் நெய்விளக்கு

சுட்டெரித்தாலும் அஸ்தமன நேரத்தில் அள்ளிபருகவே தாகவிடாய்


 தனித்திருத்தலின் தவ முறிவு வரமே எனில்...

-புவனா கணேஷன்

2 comments:

  1. Manju Bashini Sampathkumar
    ---------------------------
    பெண்களின் அற்புத கண்ணோட்டக்கவிதை புவன்…
    பெண்கள் எப்போதும் பரபரவென்று வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு கணவன், பிள்ளைகளை கவனித்துவிட்டு தானும் வேலைக்கு ஓடுவார்கள்.. ஆனால் அங்கு தன் நலனை பார்க்கவோ காக்கவோ தவறிவிடுவார்கள்…
    அழகிய சொல்லாடல்… உயிர் துடிக்கும் ஓசை நுகர.. திரும்ப திரும்ப வாசிக்க வைத்த வரி் இதுவும் கடைசி வரியும்.. தனித்திருத்தலின்.. தவமுறிவு வரமே…

    உடல்நலம் சரியில்லாமல் போகும் வரை தன் ஆரோக்கியம் பற்றிய சிந்தனை நமக்கு இருப்பதில்லை… எப்போதும் கணவருக்கு பிடித்த பதார்த்தம்.. பிள்ளைகளுக்கு உவந்த பண்டங்கள் என்று பார்த்து பார்த்து செய்யும் மனநிலை…

    தனிமையின் வெறுமை உடல்நலம் சரியில்லாதபோது உணரும் ஒரு அருமையான கட்டம்… அப்போது கணவரும் குழந்தைகளும் ஆபிசுக்கு லீவுப்போட்டு மனைவியின் ஆரோக்கியத்தை கவனிக்கத்தவறுவதில்லை…
    ஒற்றை கோபுர உச்சியில் எவருக்கு என்றில்லாமல் சுடரும் நெய்விளக்கு.. உண்மைதானே?... அழகிய உவமை… எல்லாருக்காகவும் ஒளி தரும் அற்புத பணி செய்விளக்குக்கு… சுட்டெரித்தாலும் அஸ்தமன நேரத்தில் அள்ளிப்பருகவே தாகவிடாய்.. தனித்திருத்தலின் தவமுறிவு வரமே…. எனக்கும் சம்மதமே.. இப்படி ஒரு நிலை வரும்போது சிந்தனை அதிக ஊற்றெடுக்கும் என்பதற்கு இந்த கவிதை ஒரு சாட்சி புவன்…

    உனக்கு உடல்நலம் சரியில்லாமல் இத்தனை நாட்கள் இருந்ததை.. குழந்தை ஹேமா மூலமாக அறியப்பெற்றேன்.. உன் ஆரோக்கியம் அதிமுக்கியம்… நீ இருந்தால்… இதைப்போன்று இன்னும் அழகிய கவிதைகள் அதிகம் கிடைக்கும்… நீ ஆரோக்கியமாக இருந்தால் என்றென்றும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.. இறையருள் என்றும் உனக்கு கிடைக்கட்டும்பா…

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...