நெருப்புக்குச்சியும்
நீர்த்துளியும் கொண்ட காதலாய்,
உயிரனைத்த
மெய்யுறு...
... அலையுற்ற மிதவை என் மீது,
நச்சென நிலையுற்ற நங்கூரம்....
கடல்நீரோடு கொண்ட தீரா காதலில்,
வானம் அள்ளி வீசிய நிலா சாரலாய்
முத்த கீற்றுகள்.....
ஒரு கோடி வார்த்தைகள் பொய்த்து போக,
ஒரு விரல் ஸ்பரிசத்தில் கிறங்க மூழ்கடித்தாய்...
வெள்ளை காகித தாள் என்மீது,
எழுதுபொருள் அவன், இட்டு நிரப்பிய
காதல்...உள்வாங்கி,
கசிந்தேன் கவிதையாக...
நீர்த்துளியும் கொண்ட காதலாய்,
உயிரனைத்த
மெய்யுறு...
... அலையுற்ற மிதவை என் மீது,
நச்சென நிலையுற்ற நங்கூரம்....
கடல்நீரோடு கொண்ட தீரா காதலில்,
வானம் அள்ளி வீசிய நிலா சாரலாய்
முத்த கீற்றுகள்.....
ஒரு கோடி வார்த்தைகள் பொய்த்து போக,
ஒரு விரல் ஸ்பரிசத்தில் கிறங்க மூழ்கடித்தாய்...
வெள்ளை காகித தாள் என்மீது,
எழுதுபொருள் அவன், இட்டு நிரப்பிய
காதல்...உள்வாங்கி,
கசிந்தேன் கவிதையாக...
( புவனா கணேஷன் )
Attagasam..
ReplyDelete