Wednesday, February 6, 2013

காதலாகி,கசிந்து....

நெருப்புக்குச்சியும்
நீர்த்துளியும் கொண்ட காதலாய்,
உயிரனைத்த
மெய்யுறு...

... அலையுற்ற மிதவை என் மீது,
நச்சென நிலையுற்ற நங்கூரம்....

கடல்நீரோடு கொண்ட தீரா காதலில்,
வானம் அள்ளி வீசிய நிலா சாரலாய்
முத்த கீற்றுகள்.....

ஒரு கோடி வார்த்தைகள் பொய்த்து போக,
ஒரு விரல் ஸ்பரிசத்தில் கிறங்க மூழ்கடித்தாய்...

வெள்ளை காகித தாள் என்மீது,
எழுதுபொருள் அவன், இட்டு நிரப்பிய
காதல்...உள்வாங்கி,
கசிந்தேன் கவிதையாக...
 
( புவனா கணேஷன் )
 

1 comment:

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...