கவனி ரோமியோ..
இது நாள் வரை என் பெயரெச்சம் தெரியாது உனக்கு
போகும் இடமெல்லாம்
பின் ஊர்ந்து வழிந்து
பின் ஊர்ந்து வழிந்து
வினையெச்சம் செய்கிறாய் நீ
எரிச்சல் எரிச்சலாய் அடுக்கு தொடர்
காண்கிறேன் உன்னால்
உடனே உன் தொடர்நிலை வினைக்கு முற்று செய்
தறிகெட்ட மனதை அடக்கி
தன்னிலை மோகம் விட்டொழித்து
தெரிநிலை கொள்
இனியும் இது போல உவமை செய்தால்
உவமேயம் கெட்டுவிடும் எச்சரிக்கை
No comments:
Post a Comment