Thursday, February 21, 2013

வினோதம் நீ

கவனி ரோமியோ..
 
இது நாள் வரை என் பெயரெச்சம் தெரியாது உனக்கு
 
போகும் இடமெல்லாம்
பின் ஊர்ந்து வழிந்து
வினையெச்சம் செய்கிறாய் நீ
 
எரிச்சல் எரிச்சலாய் அடுக்கு தொடர்
காண்கிறேன் உன்னால்
 
உடனே உன் தொடர்நிலை வினைக்கு முற்று செய்
 
தறிகெட்ட மனதை அடக்கி
தன்னிலை மோகம் விட்டொழித்து
தெரிநிலை கொள்
 
இனியும் இது போல உவமை செய்தால்
உவமேயம் கெட்டுவிடும் எச்சரிக்கை
 
 

 
மீன் விற்கும் இரட்டை கிளவிக்கு
சொன்னால் உன்னை
கூறுபோட்டுவிடுவாள்
 
என்ன !! திமிரா !!
ஆம் நிலையணி என்ற திமிர் எனக்கு
 
அமிலம் வீசி என்னை
திரிபு செய்ய போகிறாயா
 
ஆக்கப்பிறந்தவளை அழிக்கவென
உருவகித்த
 உன் ஜென்மத்தையும் மனிதன் என்பதா !!!!!
 
புவனா கணேஷன்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...