Monday, February 18, 2013

நாங்கள் பசித்திருக்கிறோம்...

யாரோ தேடிய இரைக்கு
நாங்கள் பசித்திருக்கிறோம்...

கூடுகளில் அடையாத பறவைகள்...
சிப்பிகளுக்கு வேண்டாமல் சிதறிய முத்துக்கள்...
 
 எவராலும் இதுவரை பெயரிடப்படவில்லை...
ஏனோ அது தேவையும் இல்லை... 
 
 
உண்ண கொடுத்தவரே
உயிரை கொடுத்தவர்
என்றால்
வீதிகள் தோறும்
பெறோர் கண்டோம்...

பாதையில் தூங்கினாலும்
சொப்பனம் வருதே...
கிட்டாததெல்லாம் கிட்டியது
விடியும் வரை...

( புவனா கணேஷன் )

1 comment:

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...