Friday, March 21, 2014

கதையின் கதை



மரப்பாச்சிகளின் நிழலுக்கும் 
உளி அறைந்து கொண்டிருந்தவனின் 
ஊர் அது 

உடைந்தவர்களின் வார்த்தைகளுக்கு
பசை விற்பவனாகவே
அறிமுகமாகினான் மற்றொருவன்

ஊரானுக்கும் ஒட்டவந்தவனுக்குமிடையே
இளக்கமற்ற
புன்னகையை முறித்துப் போட்டான்
மூன்றாமவன்

அது
வில்லாகி
பாம்பாகி
பின்
கயிறாகத் திரிந்ததே கதை

-புவனம்

1 comment:

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...