Monday, March 3, 2014

சின்ன சின்னதாய்

*ஒற்றை நூல் பிடியில் 
காற்றாடிச் சிலும்பலாய் 
திமிர்ந்தலையும் ஞாபகங்கள்
வண்ணம் தீட்டிக்கொள்ளலாம் பிடித்த பச்சையில்

*பாதம் கொப்பளிக்கும் சூட்டோடும்
நிழலோடிய புத்தியோடும் 
கோவில் பிராகாரத்தை சுற்றி வரும்பொழுதோ 
அல்லது
நடைபாதையில் 
நடுவழியில் ஒற்றைச் செருப்பு 
அறுந்தபொழுதோ
தலையில் இருந்து காலுக்கு
இறங்கிய கனத்தை இங்கே
கழற்றி விடவும்


*அட ! லேசா...
லேசா தூறல் இந்நாட்களின் மேல் 
போதுமாயிருக்கிறது அதுவாக தேங்கிவிட

*நம்மை நாமே
தீட்டும் ஓவியம்
இந்நாள்வரை 
பார்த்தேயிராதவர்களின்
உருவிலிக்கு பொருத்திப்பார்க்கும்
முகமூடி

*அள்ளிச் சுருளப் போர்த்திய குளிரில்
மோதிக் குலவும் மற்றுமொரு 
மழைத்த நாள் 
நீளும் தண் மத்தம்

*தூண்டிலின் தினவுக்கு 
திக்கித்த மீன்களுக்கிடையில் 
கூடையின் விளிம்பைத் தாண்ட 
திமிரும் மீனாகிறது 
தினத்தையொட்டி கொண்டாடப்படும் 
காதல்

*நம் அந்த நேரத்து மனநிலையை கண்ணாடியாய் காட்டும் எழுத்தோ, ஓவியாமோ எது ஒன்றோ எளிதில் நம்மை, மனதைத் தொடும் .. 
தளர்ந்த மனநிலையில் வாரி அணைக்கும் இசையோ சொல்லோ எது ஒன்றோ
நுரைக் குமிழியின் மதர்வில் 
மற்றும் 
பசி நேரத்து பால் குரலில் 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...