பொய்த்த மழைக்கு
பிறழ்ந்து
வனந்தோறும் சுற்றித்திரியும் வெயில்
முதுகில் படர்த்திய வெம்மையை நீவும்
கொம்புகிளைத்த மான்
நிரம்பிய நீருக்கு
தாகிக்கும் காக்கைகளுக்கே
காத்திருக்கும்
கழுத்துவரை
கற்களிட்ட
குவளை
தனிமை தின்றது போக
எஞ்சியதன்
முத்தம் பகிர
ஆகாயத்துக்கு எவ்வியதாயொரு
ஊருணித்தவளை
வரைவில் ஏற்றிய
இத்தனைக்கும் பிறகு
தீண்டாத நிறங்களின்
தீட்டலில்
இவளும்
-புவனம்
பிறழ்ந்து
வனந்தோறும் சுற்றித்திரியும் வெயில்
முதுகில் படர்த்திய வெம்மையை நீவும்
கொம்புகிளைத்த மான்
நிரம்பிய நீருக்கு
தாகிக்கும் காக்கைகளுக்கே
காத்திருக்கும்
கழுத்துவரை
கற்களிட்ட
குவளை
தனிமை தின்றது போக
எஞ்சியதன்
முத்தம் பகிர
ஆகாயத்துக்கு எவ்வியதாயொரு
ஊருணித்தவளை
வரைவில் ஏற்றிய
இத்தனைக்கும் பிறகு
தீண்டாத நிறங்களின்
தீட்டலில்
இவளும்
-புவனம்
No comments:
Post a Comment