தொடர்ந்து பின் துரத்தும் தோல்விகளில் விரக்தியடைந்த ஒருவன் வாழ்வில் கிஞ்சித்தும் படிப்பற்று தற்கொலைக்கு முயல்கிறான். ஆறுமுறை அதிலும் தோற்றவனை எழாவது முறை ஏமாற்றாமல் உயிரை அறுக்க கயிறு கழுத்தில் இறுகிகொண்டிருக்கும் வேலையில், அவன் மரணத்தை துளைக்கும் கதவுகளைத் திறந்து வீட்டிற்க்குள் வருகிறாள் ஒருத்தி..
அவளால், அதே கயிற்றில் கை, கால்கள் பிணைக்கப்பட்டு சொந்த வீட்டிலேயே சிறை வைக்கபடுகிறான் அவன்
எதிர்வீட்டில் வசிப்பவனை வேவுபார்க்க இந்த வீட்டை தேர்ந்தெடுத்தவள் அவள்.பள்ளி நாட்களில் நேர்ந்த இனகவர்ச்சிப் பிடிப்பை காதல் என்றும், அதில் தான் தோல்வியடைந்தவள் என்றும் ஏய்த்தவன் எதிர்வீட்டில் இருப்பவன். அவனை கொன்றுவிடுவதே தன் வாழ்வின் லட்சியம் என்கிறாள்.
அந்த பெண்ணின் துறுதுறுக்கும் குழந்தை முகம்.எந்நேரமும் கண்காணித்து கொண்டிருந்த எதிர்வீட்டு வாசி நெருப்பில் மாட்டிகொண்டதும் பதறி ஓடி காப்பது, நிறைவேறாத ஆசைகளை கண்களில் தேக்கியவளாகவே இறந்தகாலத்தில் வாழ்பவள் அவள்.
இவ்விருவரின் உலகத்தில் நடந்தவைகளுக்கும் நடக்கபோவதுகளுக்கும் ஊடே இழையோடும் புரிந்துணர்வு ..
எந்த அடைப்புக்குறிக்குள்ளும் புகுத்த முடியாத அன்பை சொல்லும் கதை..
No comments:
Post a Comment