அனுமதிக்கு காத்திராமல்
அவிழும் சொல்லின்
மகரந்த விகசியை எழுத
பின்னிப் பிரிந்த
ஞாபகத்தை
மல்லிமொட்டூறும் வாசச்செய்தியை
காற்று முடங்கும் பொழுத்துக்குள்
லாவகமாய்
கிடுகுகள் முடையும்
கற்பனைக்குள்
சந்தமேற்றி
இவளானதன் இசைச்சீர்
**** ****
பகடையின்
ஏறுமுகங்களை
இறங்குவிகிதத்தில்
எத்தனையாவது
முறையாகவோ எண்ணிக்கொண்டிருந்தவனின்
கைக்கிளை
பிறிதொரு நாளில்
பூக்காடானது
**** ****
தொட்ட விரல்களிலெல்லாம்
பட்டாம்பூச்சியை
ஒட்டிக்கொண்டவளின்
சிரிப்பணைய
விரிகிறது நிறங்கள்...
-புவனம்
No comments:
Post a Comment