Wednesday, September 18, 2013

நிறமற்றதன் அடர்த்தி



என் வட்டங்களைச் சுருட்டி
சதுரச் சுவர்களில் அறைந்தவனவன்
ஆதாமுக்குரிய ஆப்பிளில்
ஒரு துளி விஷமாய் இருந்திருக்கலாம்

உடைத்தெறிந்த நிலாத் துண்டங்களோடு
உப்பு நீரில் மிதக்கத்  தொடங்கியது
எனக்கான நிறம்

கடைசி அலை
கால்களைக் கடத்துவதாய்
கண்களைக் கவ்வும் உறக்கத்தில்
அமிழ்ந்து போகும் முன்
கிளிமீனின் ஒப்பனை நிறத்தில்
ஒளிந்தவளானேன்

சதையறுந்து
செதில்கள் சிதற
தொண்டையில் முள் சிக்கியவனின்
கண்களில் நீந்துகிறது அம்மீன் 

-புவனம்

 

1 comment:

  1. புவனம், கவிதை யெளவனம், வலித்தாலும்.

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...