Wednesday, September 11, 2013

அவள் என்பதன் நிச்சலனம்



அறைந்து சாற்றியப்பின்
கதவின் முதுகில்
தழும்பு ஏற
உள்ளொன்று வைத்ததன்
புறம்பேசிகள்

உறவெச்சங்கள் உமிழ்ந்த
புள்ளிகளில்
கோடுகளைக் கீய்ச்சியே
வாசலை நிரப்ப

அவசரகதியில்
அருந்தியதுப்  போக
ஆடைத் தேம்பிய
தேநீரில்
ருசித்தே மிதக்கிறது
சிற்றெறும்பு

செலவில் சேமித்த காசிலும்
விடிவிளக்கு வெளிச்சத்தில்
வந்து போனவனின்
வாசனை

பெயரணிந்த பிம்பங்களை
அவள் சுமப்பாள் என்பதன்
காலக்கோல்
காளான் முளைக்க
உதிர்வதாய்  மேகங்கள்
 
- புவனம் 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...