அறைந்து சாற்றியப்பின்
கதவின் முதுகில்
தழும்பு ஏற
உள்ளொன்று வைத்ததன்
புறம்பேசிகள்
உறவெச்சங்கள் உமிழ்ந்த
புள்ளிகளில்
கோடுகளைக் கீய்ச்சியே
வாசலை நிரப்ப
அவசரகதியில்
அருந்தியதுப் போக
ஆடைத் தேம்பிய
தேநீரில்
ருசித்தே மிதக்கிறது
சிற்றெறும்பு
செலவில் சேமித்த காசிலும்
விடிவிளக்கு வெளிச்சத்தில்
வந்து போனவனின்
வாசனை
பெயரணிந்த பிம்பங்களை
அவள் சுமப்பாள் என்பதன்
காலக்கோல்
காளான் முளைக்க
உதிர்வதாய் மேகங்கள்
உதிர்வதாய் மேகங்கள்
- புவனம்
No comments:
Post a Comment