Wednesday, September 11, 2013

உறக்கத்தை தைக்கும் கனவின் கூர்

 
 
நீரில்
நட்டுவைத்த வார்த்தைகள்
ஒவ்வொன்றும் பூப்பெய்த

நீளாத கைக்குள்ளும்
பிணைந்தே கிடக்கும்...
வேர்க்கொடிகளின்
நீட்சியிலோ

உப்புத்தாள் தேய்த்த
சுவரிலிருந்து
உரு உதிர்ந்த
ஓவியப்பெண்ணின்
உயிர் மிஞ்சிய நிறங்களின்
மீட்சியிலோ

தியானித்தலின் அலைவரிசையில்
இடுகுறிப் பெயரணிந்த
சப்தங்கள் ஒடுங்கும்
அத்தருணம்
பசித்த கண்களில்
மகிழ் துளி

வளர்பிறை
வட்டங்கள்
புள்ளிகளாய்
வளைந்து மூடும் முன்


--புவனம்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...