Tuesday, September 3, 2013

அன்னத்தூவியென


உச்சி முகரும் கூதலின்
காதல் எவ்வி
திருகிய வெண் சங்கு
மேனித் திண்மத்தில்
கையணைப்பு

குவிந்த சிமிழில் நிலம் பார்க்கும்
அந்தியின் விகசிதம்
மெல்லப் பரவியது
ஸ்பரிசத்தில்

மின்மினிகள் ஒளிர்கூட்டும்
தூக்கணாங்குருவிக்  கூட்டின்
இலைநரம்புப் பின்னல்
வயணத்துடன் விரவியது
விரல்கள்

விதும்பும் நரம்புத்  தீண்டலின்
திகைப்பில் மேலும் அதிர்வு
கூடியதொரு
கூடற் பொழுதில்
அலர்ந்து அவிழ்ந்த 
அன்னத்தூவியென 
நிரம்பியது
இசை

-புவனம்
 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...