Tuesday, October 1, 2013

திரிபின் சிறகுகள்





உருபடாமல் உள்ளே திரண்டதன் கசகு
சுருளத் திரட்டி எதிர் எறிந்த பந்து
எந்நேரமும் திரும்பக் கூடலாம்

எவரும் நடாத முட்புதரில்
கிளைத்திருக்கிறது ...
முரண்டுதலின் காரணி

நேற்றைக்குப் பின்னான இன்றிலும்
திமிர்ந்தலையும் பசி
உண்ணச் சொல்கிறது
ஒரு சொட்டு துரோகத்தை

கனன்றெரியும் தீச்சுடரின்
கண நேரப் புணர்ச்சிக்குப் பின்னான
விட்டில் பூச்சியின் நிறமே
தோய்கிறது வளர்பிறை இரவுகளில்

தனக்கான காட்சிகளில்
நிரம்பிக்கொள்ளும்
வெற்று வெளியின்
உரிந்த தொலியென
தட்டான்களின் படிமலர்ச்சி

நீந்தத் தேவையில்லை இனி ...

 
-புவனம்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...