தீண்டுகையின்
காற்றில்
உப்பு பூத்த
குறுஞ்செய்திக்கெனவே
கண்பொழிந்திருந்தாள் ..
தீருகையற்ற
முத்தங்களோடு
தொடுதிரையில்
திமிர்ந்து தேயும்
நிலாக்களை வளர்ப்பவள்
கண்ணெட்டிய தூரம் வரை
கடலள்ளி வைத்த
கரிக்கும்
கரைததும்பும்
நீலம்பாரித்த
பிரிவின் கண்துளையும்
அத்தனை அவசரத்திலும்
சந்திப்பின் இருப்பை
அடுத்த பிரிவு வரை
ஒத்திப்போடவே
மழைச்சொல்லாடுகிறாள்
No comments:
Post a Comment