Sunday, June 1, 2014

நெய்தலின் தையல்


தீண்டுகையின் 
காற்றில் 
உப்பு பூத்த 
குறுஞ்செய்திக்கெனவே 
கண்பொழிந்திருந்தாள் .. 
தீருகையற்ற 
முத்தங்களோடு 
தொடுதிரையில்  
திமிர்ந்து தேயும் 
நிலாக்களை வளர்ப்பவள் 

கண்ணெட்டிய தூரம் வரை 
கடலள்ளி வைத்த 
கரிக்கும் 
கரைததும்பும்
நீலம்பாரித்த 
பிரிவின் கண்துளையும்
அத்தனை அவசரத்திலும்
சந்திப்பின் இருப்பை 
அடுத்த பிரிவு வரை 
ஒத்திப்போடவே
மழைச்சொல்லாடுகிறாள் 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...