Thursday, October 10, 2013

காட்சிக்கு வெளியே



உறக்கமும் விழிப்புமென
களிம்பேறிய பாத்திரங்கள்
அதங்கம்  பூச மறந்த நாடகங்களில்

 தரையிறங்கிய பின்பும்
 மேல்நோக்கும் நோவில்
 பால் வற்றிய வெற்றிடத்தின்
பசித்த படிமம்

கருணைக் கொலைக்கென
பழக்கிய கத்தி
கதவுகளற்ற பிணவறைக்குள்
மழுங்க நேரலாம்

அந்தரங்கங்களை திறவுவதற்க்கான
சாட்சி ஒப்பமாய்
 நிரம்பவே நெளிகிறது
கைக்குள் ரேகைகள்

 கண்துடைப்புக்கேனும்
ஒற்றை விரலை
மிச்சம் வைத்துத் தீர்ந்து போ

-புவனம்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...