Tuesday, October 22, 2013

நிழல் முகம்



அனேக கண்கள் சிகப்பேறியும்
மதத்தலின்  கண்கள் பசலை பேசியும்
மற்றதன்  கண்களில்
நீலம் பாய்ந்துமாய்
நுறைத்திருந்தது கறுத்த இரவு
பார்வையற்றவளின்
நிரண்டிய கனவில்
தரையிறங்கிய மொத்த
ஆகாயமும்
முத்தத்தின் நீளத்துக்கு
துயிலத் தெரிந்த
நத்தைக்குள் சுருண்டது

வெட்டிவேரின் வாசத்துக்கு
முகஞ்சிடுக்கும்
எருக்கலஞ்செடியையும்
நனைத்தே ஊர்கிற காற்று
மேலும் சற்று சிலுப்பியது

உதிர்மணலடுக்கின் கீழ்
ஊற்றுத்  துளிகளின்
கர்வத்தோடே
கன்னிமை நெகிழ்த்த தந்தது
அவ்விரவு

-புவனம்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...