முன்பு நம் பகுதியிலும் வழக்கில் இருந்த தேவதாசி முறையே கிட்டத்தட்ட .. ஆனால் ஆண்களையும் சேலை கட்டி இது மாதிரி இறைவிக்கு அர்ப்பணிப்பு செய்ததாக கேள்விப் பட்ட வரை இல்லை…
கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர கிராமப் புறங்களில் அதீத நம்பிக்கையோடு பின்பற்றப்படும் எல்லம்மா என்ற பெண் தெய்வத்துக்கு நேர்ந்து விடப்படும் பெண்கள் (ஜோடின்)
மற்றும் ஆண்கள் (ஜோக்தா) மஞ்சள் தரித்து எல்லம்மாவுக்கு என நேர்ந்து விட்ட ப்பிறகு அந்த ஆணோ, பெண்ணோ பிச்சை எடுத்து வாழ்வதை, அவ்வூரில் இருக்கும் ஆண்களுக்கு பொதுச் சொத்தாக மதிக்கப்படுவதை மிகுந்த வலியோடுக் கூடிய காட்சிகளில் சொல்லப்பட்ட படமே ஜோக்வா (விழிப்பு
).. மராத்தி மொழி திரைப்படம்
இறுக்கிப் பிடித்து அட்டையாய் உறிஞ்சும் சமூக மூடப் பழக்கமும் அதில் கருகிச் சாம்பலாகும் தனி மனித உணர்வுகளையும் நகரும் காட்சிகளில் நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டப்படுகிறது.
சுலி என்ற இளம்பெண் பட்டாம்பூச்சியாய் கிராமத்தில் சுற்றித் திரிந்து தனக்கு உரிய அழகான எதிர்காலத்தின் கனவில் நனைபவள் .. தலைமுடியில் சற்றே சிக்குப்பிடித்ததே அறிகுறி என எல்லம்மாவுக்கு நேர்ந்துவிடப்
படுகிறாள் .. மிகுந்த அதிர்ச்சியோடு
.. தனக்கு நேர்வதை எதிர்க்கொள்ள முடியாமல்
.. சுற்றி இருப்பவர்களை எதிர்க்கவும் இயலாமல்..
தாயப்பா என்கிற ஆண் மகனுக்கும் இதுவே நேர்கிறது...
ஆடைகள் பறிக்கப்பட்டு சேலையில் வலம்வர ச்செய்கிற அவன் சமூகத்தை, வீட்டை,
உறவினர்களை ச் சினத்தோடு எதிர்க்கிறான் அவன் ..
இவ்விருவருக்கும் இடையே மலரும் காதலும் ..
சுற்றிப் பிணைந்த கட்டுடுடைத்து தங்கள் சுயம் காணும் ஒரு அழகான சித்திரமாகவும் ஜோக்வா சிறந்த வெளிப்பாடு.
“ஆண் என்பதையும் பெண் என்பதையும் கடந்த மனிதப்பிறவிகள் நாம் .. உலகின் நிர்வாணக் கண்களுக்கு ஆடை அணிந்த மனிதன் நீ மட்டுமே” என்கிற வசனங்கள் உயிர்ப்பு…
தவிர பின்னணி இசையும் .. பாடல்களும் செவிக்கு இசைவு
மீன்கொத்தியின் அலகில் தொக்கி நின்றப்போதும் தன்னைப்பாதுகாப்பாய் மீன் உணர்ந்தால் அதுவே காதலுற்றத் தருணம்என்பதாக தோன்றியது
புவனம்
No comments:
Post a Comment