Wednesday, July 10, 2013

இணைமுரண்



இலையுதிர் காலத்து
இணக்கமற்ற விதிர்த்த  மொழியில்
திருப்பப் பாதை எங்கும்
இருள் கவ்விய
வெறுமை சூழ
 
அவளும் தனிமையும்

எவ்விடமோ
இறுக்கிப் பிணைந்த
முரண் முடிச்சுகளின் கயிறு
வேரூடி
துருத்திய உருவோடு
துரத்துவதாய்

கால்கள் பின்னிப் புதைய
அசாதாரண தருணத்தில்
அமிழ்ந்து போனபின்
நினைவு தப்புதலே
விதையென

-புவனம்
 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...