நரம்புப் பின்னலில்
குருதியும் சதையுமாய்
இசையூட்டம்
தொடர்பு எல்லைக்கு வெளியேயும்
அலைப்பேசும்
சிகைக்கோதல்
ஞாபகக் கோர்ப்பின்
கடவுச்சொல்லடுக்கில்
காற்றுப்புகாத
கையடக்க
கனவில் மடித்து
காத்திருப்பு
உப்பு நீர் முகந்த மேகங்கள்
நம் பாதையை உரசும் வரை
புழுதி துறந்த
புதுமணலில்
வானவில்
வனையட்டுமென
ஒளி பிரிகையின் ஒலி
-புவனம்
No comments:
Post a Comment