Friday, July 12, 2013

ஒளி பிரிகையின் ஒலி

 
மெல்லியல்
நரம்புப் பின்னலில்
குருதியும் சதையுமாய்
இசையூட்டம்

தொடர்பு எல்லைக்கு வெளியேயும்
அலைப்பேசும்
சிகைக்கோதல்
ஞாபகக் கோர்ப்பின்

கடவுச்சொல்லடுக்கில்
காற்றுப்புகாத
கையடக்க
கனவில் மடித்து
காத்திருப்பு

உப்பு நீர் முகந்த மேகங்கள்
நம் பாதையை உரசும் வரை

புழுதி துறந்த 
புதுமணலில்
வானவில்
வனையட்டுமென

ஒளி பிரிகையின் ஒலி

-புவனம்
 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...