Monday, December 30, 2013

எல்லைக்கு படர்த்திய வேலியின் முட்கள்



புதை நிலத்தை கீய்ச்சும்  
கழுகின் நகல்தோற்றத்தில்
சூழ ஒரு கூட்டம்

அவதானிப்புகளை ஏற்ற 
இலகுவாய் இருந்தது போலும்
பாதி வரைவில்
நின்று போனதொரு
ஓவியத்தின்
ஒளிவிளங்கா கண்களில்

எவரோ இருந்ததன் அடையாளமாய்
மூலையில் சாத்திய
நாற்காலியின் நிறைப்பு
கடந்து போவோரின்
பாவனைகளில்

உவர் நிலத்தில்
ஒன்றாத வேரின்
உயிர்க்களைப்பில் உறவிலி
இருந்தும்
காய்ச்சல் வற்ற விழுங்கிய
அரை மாத்திரைக்கும்
கூடுதலே
தனித்தவளின்
உலகத்தில் தங்கியிருப்போரின் எடை

-புவனம்

1 comment:

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...