உன் பொருட்டு எனைத் தழுவியிருந்த
பொய்யின் நீர்மையென ஆகாயம்
இருந்தும் இல்லாமல் போவதன்
அத்தியாயங்களைச் சொட்டியதன்
குழி நிறம்பல்களில்
திமிங்கிலங்களை விழுங்கும்
கற்பனை மிதப்பின்
கப்பலை மூழ்க விட
காகிதம் போதுமாயிருந்தது
பெயர்ப் பலகையில்
மழைப்பாசிக்கு மருவிய
இறந்ததன் காலம்
அடைகாக்கும் பக்குவத்தில்
அடுத்த நொடியை
மருதாணியில் தீட்டிக்கொள்ள
மற்றுமொரு கை
-புவனம்
No comments:
Post a Comment