Thursday, March 14, 2013

மறைந்தும் மறையாமல் மனதோடு...

மறைந்தும் மறையாமல் மனதோடு...

ஸ்மிதா படேல் :
மோனோலிசா போல் சிரிக்கும் முகபாவம் .. காதல் பேசும் கண்கள்.. மாநிற,
அழகு ததும்பும், எனக்கு மிக பிடித்த நடிகை.என் 7 அல்லது 8 வயதில் மறைந்துபோனார்.. அதே நாளில் என் 5 வயது தம்பியும்.. நாடு முழுதும் மூளை காய்ச்சல் பரவி இருந்த சமயம் அது.


ஸ்மிதா :
கண்களை சுழட்டி, சொருகி ஆயிரம் மொழி பேசும் காந்த
கண்ணழகு பெண்மணி..அரிதார பூச்சுக்கு அப்பாற்ப்பட்டு இயல்பில் மென்மையானவர்.பேறும், புகழும், பணமும் கூடவே நிறைய மன அழுத்தமும் கண்டு மறைந்தவர்.

அனுராதா ரமணன் :
பெண் எழுத்தாளர்...இயல்பில் துணிச்சலும், நிமிர்வும் உள்ள பெண்மணி, எழுத்திலும் அதையே பிரதிபலித்தார் , சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி காணாத போதும் நகைச்சுவை ததும்ப எழுத எத்தனித்தவர்...தான் கண்ட நோய், பிணி குறித்து எழுதிய போதும் அப்படியே, இவரின் கதைகளின் தலைப்பு ஈர்ப்பு உள்ளதாக இருக்கும் ரமணிச்சந்திரனின் தலைப்புகளை போலவே ... விதவா கோலத்துக்கு எதிராக நின்ற பெண்மணி.


கே.பி.சுந்தராம்பாள் :
நிஜத்தில் அவ்வையார் எப்படி இருப்பாரோ !.. அவ்வையாரை நினைத்தால் இவர் முகமே தெரியும் ... பக்தி பாடல்கள் பாடியே இவரது கண்கள் தெய்வீகம் பேசுதோ !! என்ன வளமையான குரல்.. முருகன் சிலைகளை பார்க்கும் பொழுது எல்லாம் இவரது குரலில் சென்று வா மகனே, வென்று வா பாடல் மனதில் ஓடும்.


ஷோபா :
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் ..கண்கள் , சிரிப்பு எல்லாம் அள்ளும்.. மாடர்ன் டிரஸ் காட்சியில் கூட மூக்குத்தி மின்னும்.. தனித்தன்மை அழகி ..உண்மையில் முள்ளும் , மலரும் ஒருங்கே கண்டவர்...ரொம்ப சின்ன வயதில் கே.கே.நகர் குடியிருப்பில் நாங்கள் வசித்த வீட்டுக்கு சற்று அருகே ஒரு இடுகாடு இருக்கும் .. இன்றளவும் ஷோபா சுடுகாடு என்றே சுட்ட படுகிறது .. அங்கே தான் இவர் உறைவிடம்.

-புவனா கணேஷன்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...