Thursday, February 19, 2015

நீர்குமிழியின் தாழாக் கண்


ஏதுமற்றதன் நிரம்பல்களே
 இருளில் கிளைத்துக்
தனல்வதாக
 நிர்வாணத்தின் நோக்குகையில்
கண்ணேரு கொள்ளவியலாத
கறுமையின் கூடலில்
மற்ற நிறங்கள்
அழகுப்படாது அவிழ
இரவின்
 அடர்ந்த
 தேவைக்கு மெய்ப்போர்த்திக்கொண்டவனின் கைவெதுப்பு
ஆதிரைக்கு மிக நெருக்கத்தில்
அன்னியப்பட்டுக் கிடக்கிறது

மறுநாள் விடியல் தொட்டு
அவள் மாற்றுப்பெயரோடு
அறியப்படுவாள் என்பதே
மீண்டும் உடுத்திக்கொள்ளும்
வெளிச்சத்தில்
 கூசும் கண்களின் விகாரம்.

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...